/* */

நாகர்கோவில் முக்கடல் அணை குழாய் சீரமைப்பு பணிகள் - மேயர் ஆய்வு

குமரியில் பழுதடைந்த முக்கடல் அணை குழாய் சீரமைப்பு பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் முக்கடல் அணை குழாய் சீரமைப்பு பணிகள் - மேயர் ஆய்வு
X

முக்கடல் அணை பணியை நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக முக்கடல் அணையில் இருந்து குழாய்கள் மூலமாக கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அந்த தண்ணீர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பல்வேறு பகுதிகளில் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனிடையே அடுத்த 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என்ற நிலையில் மேற்படி பணிகளை விரைந்து முடித்து குடிநீர் விநியோகத்தை சீராக்க மேயர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸ் லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முக்கடல் அணை பகுதியில் அமைந்துள்ள அறிவியல் பூங்கா மற்றும் கலை அரங்கங்களையும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 18 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை