Begin typing your search above and press return to search.
கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோவிலில் உழவாரப்பணி துவக்கம்
தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் உழவாரப்பணி தொடங்கியது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் இந்து கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறை கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இதனிடையே இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறை கோவிலில் உழவாரப்பணி தொடங்கியது.
அதன்படி குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ராஜகோபுரத்தில் உழவாரப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்த பணியில் உள்ளூர் பக்தர்களும் இணைந்து உழவார பணியை மேற்கொண்டு வருகின்றனர்.