/* */

கன்னியாகுமரி கடற்கரையில் மயில்கள் கூட்டம்; சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

குமரிக் கடற்கரையில் மயில்கள் கூட்டம் கண்கொள்ளா காட்சியாக அமைவதோடு, சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி கடற்கரையில் மயில்கள் கூட்டம்; சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
X

கன்னியாகுமாரி கடற்கரையில் குவிந்துள்ள மயில்கள் கூட்டம்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக மயில்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரை பகுதியில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக போடப்பட்டுள்ள கற்களின் மீதும், காந்தி மண்டபத்தில் பின்பக்கம் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் இந்த மயில்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

சில நேரங்களில் மழை மேகத்தை கண்டு ஆண் மயில்கள் தோகை விரித்து ஆடும் அழகிய காட்சியும் அவ்வப்போது நிகழ்கின்றது. இந்த அழகிய காட்சியை கடற்கரைப் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடி நின்று பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.

மேலும், மயில்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதோடு மட்டுமின்றி, தங்களது செல்போன்கள் மூலம் படமெடுத்தபடி செல்கின்றனர்.

Updated On: 29 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...