Begin typing your search above and press return to search.
சிறுமி பாலியல் பலாத்காரம் - போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபர்
குமரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே 17 வயது பள்ளி மாணவியை ஒருதலை பட்சமாக காதலித்த வாலிபர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரில் பேரில் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் பெனில் (33 ) என்பவர் மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்ததால் வாலிபர் தலைமறைவான நிலையில் வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் விரித்த வலையில் தலைமறைவாக இருந்த பெனில் சிக்கினார், இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.