/* */

குமரியில் கனமழையால் 200 ஏக்கர் நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்பு

குமரியில் பெய்து வரும் கனமழையால், 200 ஏக்கர் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமரியில் கனமழையால் 200 ஏக்கர் நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்பு
X

தாழக்குடி பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்துள்ள நெற்பயிர்கள்.  

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 42 மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. அணைகளில் இருந்து 28 ஆயிரம் கன அடி நீர் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கோதையாறு தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகி குமரி மேற்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், அணைகளில் இருந்து பெருமளவில் நீர் திறக்கப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனிடையே தாழக்குடி பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழக்குடி, இறச்சகுளம், புத்தேரி தெரிசனங்கோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டிருந்த நெல் விவசாய நிலத்தில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது.

இதன் காரணமாக நெல் பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கியுள்ள நிலையில், மழை நீர் வடியாததால் நெல் பயிர்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் அழியும் நிலைக்கு செல்வதை கண்டு அப்பகுதி விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.

Updated On: 17 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...