/* */

குமரியில் வெள்ள சேத பகுதிகளில் மத்திய சிறப்பு குழுவினர் ஆய்வு

குமரியில் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்பு குழுவினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர்.

HIGHLIGHTS

குமரியில் வெள்ள சேத பகுதிகளில் மத்திய சிறப்பு குழுவினர் ஆய்வு
X

குமரியில் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்பு குழுவினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த அதி தீவிர கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது, மாவட்டம் முழுவதும் வெள்ளைக்காடாக மாறிய நிலையில் அதிகமான பாதிப்புகளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் குமரியில் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய நிதித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.பி.கவுல், மத்திய நீர் வள ஆராய்ச்சி இயக்க தங்கமணி, மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குனர் பவ்யா பாண்டே, மத்திய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கொண்ட மத்திய அரசின் சிறப்பு குழுவினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த வெள்ள சேத புகைப்படங்களை பார்வையிட்ட மத்திய அரசின் சிறப்பு குழுவினர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரிய துறை, வேளான் ஆகிய துறைகளால், மழை வெள்ளத்தில் சேதத்தை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.

Updated On: 22 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்