/* */

இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க பாஜக மகளிரணி வலியுறுத்தல்

போதை பழக்கத்தால் குடும்பமே சீரழிவதாகவும், கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க பாஜக மகளிரணி வலியுறுத்தல்
X

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த பாஜக மகளிரணி நிர்வாகிகள்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் இது போன்ற போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கென தனிப்படைகள் அமைத்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் போலீசாரின் நடவடிக்கையை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை, பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் இது போன்ற போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருவதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில்,போதை பழக்கத்தால் குடும்பமே சீரழிவதாகவும், கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு போதை வழிவகுப்பதாகவும், இதனை தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளனர்..

Updated On: 13 Oct 2021 11:59 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!