/* */

சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து: போலீஸ் எஸ்.ஐ., உயிரிழப்பு

சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்த நிலையில் இன்று பணிக்கு சென்றபோது இந்த விபத்து நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து:  போலீஸ் எஸ்.ஐ., உயிரிழப்பு
X

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முருகன்.

காஞ்சிபுரம் வேலிங்க பட்டரை பகுதியை சேர்ந்தவர் முருகன், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு பணிக்காக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சின்னையன் சத்திரம் அருகே சென்ற பொழுது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக முருகன் மீது மோதியதில் கண்டெய்னர் லாரியின் டயரில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டெய்னர் லாரியை ஒட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சாமகுளம் பகுதியைச் சார்ந்த பெருமாள் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் மரணம் அடைந்த முருகனுக்கு பாண்டிசெல்வி என்ற மனைவியும், அசோக்குமார் , ஆனந்த் என்ற மகன் இருமகன்கள் உள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் மரணம் அடைந்தது சக காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 19 July 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி