/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி : இரு வார்டுகளில் பாமக வெற்றி பெற்று ஆறுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி : இரு வார்டுகளில் பாமக வெற்றி பெற்று ஆறுதல்
X

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற இரு பெண் வேட்பாளர்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 50 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி 32 இடங்களை கைப்பற்றி அதிகப் பெரும்பான்மை பெற்றது.

இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் பத்தாவது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சரஸ்வதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பானுமதியை விட 504 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இதேபோல் நாற்பத்தி இரண்டாவது வார்டில் போட்டியிட்ட சூர்யா தர்மராஜ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மகேஸ்வரி காமராஜர் விட, 254 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். முதல்முறையாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியில் இரு பாட்டாளி மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பது அக்கட்சியினர் இடையே ஆறுதலை தந்துள்ளது.

Updated On: 22 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...