Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம்: விறுவிறுப்பாக நடக்கும் 3 கட்டம் தடுப்பூசி முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம், 450 இடங்களில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் இன்று 3-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை மூன்றாம் கட்டமாக இன்று மாவட்டம் முழுவதும் 450 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பெருநகராட்சி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் 65 இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் காலை 7 மணி முதலே பணியாளர்களை கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் இன்று காலை 11 மணி வரை 1750 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 5000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்ட நிலையில் 11:00 மணி நிலவரப்படி 1750 நபர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் நிலை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.