/* */

காஞ்சிபுரம் அருகே வழக்கறிஞர் படுகொலை

காஞ்சிபுரம் அருகே வழக்கறிஞர் படுகொலை
X

காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அழகரசன். இவர் சமூக சேவை மற்றும் கழிவுப் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் அவர் தனது குடோனில் இருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் புகுந்து அவரை சரமாரியாக தலையில் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அவருடன் இருந்த நபர் அளித்த தகவல் பேரில் அங்கு வந்த அவரது உறவினர்கள், அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காஞ்சி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொழில் சம்பந்தமாக ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 April 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு