/* */

தேவரியம்பாக்கத்தில் அதிகளவில் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட செங்காந்தள் மலர்

Gloriosa Superb In Tamil - புற்றுநோய், வாதநோய் , மூட்டு வலி மற்றும் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ தேவைகளுக்கு இதன் அனைத்து பாகங்களும் பெரிதும் உதவுகிறது

HIGHLIGHTS

தேவரியம்பாக்கத்தில் அதிகளவில் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட செங்காந்தள் மலர்
X

வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் பல்வேறு நோய்களுக்கு உதவும் மருத்துவ குணம் கொண்ட செங்காந்தாள் மலர்.

Gloriosa Superb In Tamil - செங்காந்தாள் மலர் குறித்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மலர் பொதுவாகவே ஆப்பிரிக்கா , ஆசிய கண்டங்களில் காணப்படும். பொதுவாகவே இந்த பூ வேலிகள் மட்டுமல்ல சாலையோரங்கள் மற்றும் காடுகளில் படர்ந்து வளரக்கூடியது.

இதன் மலரை பார்கையில் அழகிய விரல்கள் போல் அமைந்து சுடர் போல் காட்சியளிக்க கூடிய இந்த மலரின் அனைத்து பாகங்களும் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும். இந்த பூ பல்வேறு நிலைகளில் தன் நிறத்தை மாற்றிக் கொண்டு பூப்பதால் இதை செங்காந்தாள் மலர் என்றும் கூறுகின்றனர்.

இதில் தேன் சுவை அதிகம் இருப்பதால் எப்போதுமே இப்பூவில் வண்டுகள் குருவி என பல தேனை சுவைத்து உண்டு மகிழ்ந்து உண்ணும். இந்த செங்காந்தாள் மலர் புற்று நோய் பரவாமல் தடுக்க நல்ல ஒரு மருந்தாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் பாம்புகடி , தேள்கடி உள்ளிட்ட விஷக்கடிக்கு சிறந்த முறிவு மருந்தாக உதவுவதாக கூறப்படுகிறது.

வாத நோய், மூட்டு வலி , தொழு நோய் பால்வினை , வெண்குஷ்டம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்து செங்காந்தள் மலர். அவ்வகையான செங்காந்தாள் மலர் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் அதிகம் காணப்படுவதாக அக்கிராம ஊராட்சி மன்ற தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான அஜய்குமார் கண்டறிந்துள்ளார்.

மேலும் இப்பூவை தொடர்ந்து பார்த்தால் கண் வலி வரும் என்பது பழைய காலத்தில் இருந்து கூறப்படுவதால் இதை பொதுமக்கள் அதிக அளவில் இதுகுறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளாதது ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலமாக அப்பகுதியில் ஆய்வு செய்த போது மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் அதிக அளவு இந்த செங்காந்தள் மலர் உள்ளதை கண்டறியப்பட்டு அதனை பாதுகாக்க தற்போது முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிக நோய்களை தீர்க்கக் கூடிய இந்த செங்காந்தள் மலர் இனிவரும் காலத்தில் ஆவது பாதுகாத்து பல்வேறு நோய்கள் தீர இதை பயன்படுத்துவோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Aug 2022 10:06 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை