Begin typing your search above and press return to search.
ஏழைகளின் ஃபிரிட்ஜ் மண்பானை விற்பனை காஞ்சியில் ஜோர்
ஏழைகளின் ஃபிரிட்ஜ் என அழைக்கப்படும் மண்பானை தற்போதைய பயன்பாடுக்கு ஏற்றவாறு தயார் செய்யப்படுவதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் தற்போது கோடை காலம் வழக்கத்திற்கு மாறாக முன்பே துவக்கியுள்ளது. கோடை வெப்பத்தை தணிக்க பழரசம், மோர், இளநீர் என பலவகைகளில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் வசதியற்ற பலர் தங்கள் இல்லங்களில் ஃபிரிட்ஜ் இல்லாததால் ஏழைகளின் ஃபிரிட்ஜ் எனப்படும் மண்பானையை வாங்க ஆர்வமாக உள்ளனர்.
மண்பானை உடலுக்கு தீங்கற்றது என்பதாலும், எப்போதும் குளிர்ச்சியை தக்க வைக்கும் பொருள், விலை குறைவு என்பதாலும் நவீன கால பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உள்ளதாலும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.