Begin typing your search above and press return to search.
கொரோனா நிவாரணப் பணிக்கு சிறுவன் நன்கொடை
கொரோனா நிவாரணப்பணிக்கு தான் சேமித்து வைத்திருந்த தொகை ரூ.1000 காஞ்சிபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் வழங்கியுள்ளான்.
HIGHLIGHTS
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை அறிந்த காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதி நாகலூத்து தெருவில் வசிக்கும் கார்த்திக் என்பவரது மகன் ரோஹித் (6) தான் சேமித்து வைத்திருந்த தொகை ரூ.1000த்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இணையத்தின் வாயிலாக செலுத்தினான்.
அதற்கான ரசீதையும் அரசு இணையத்தில் வெளியிட்டுள்ளது. முதலாம் வகுப்பே படித்து வரும் சிறுவன் ரோஹித்தின் மனித நேயத்தை சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பலரும் பாராட்டினர்.