4 ஒன்றியங்களின் ஓட்டுப்பெட்டிகள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு: ஆட்சியர்

பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பெட்டிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
4 ஒன்றியங்களின் ஓட்டுப்பெட்டிகள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு: ஆட்சியர்
X

பாதுகாப்பு அறை (Strong Room) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பகுதிகளை  மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உளுந்தூர்பேட்டை உள்ளாட்சி பதவியிடங்களுக்கான ஓட்டுப்பெட்டிகள் கலைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை (Strong Room) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பகுதிகளை மாவட்ட தேர்தல் அலுலவர், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி திருக்கோவிலூர், திருநாவலூர், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 06.10.2021 முடிவுற்றது. திருக்கோவிலூர் ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கும், திருநாவலூர் அன்னை தெரசா பொறியியல் கல்லூரி திருநாவலூரார் ஒன்றியத்திற்கும், உளுந்தூர்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கும், அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் பாதுகாப்பு அறையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்படவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் உளுந்தூர்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறையில் ஆய்வு. வாக்குப்பெட்டிகள் வைக்கபடவுள்ள பாதுகாப்பு அறையினுள் உள்பக்கம் மற்றும் வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியும், காவல்துறையின் மூலம் பாதுகாப்புப்பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின் போது உளுந்தூர்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 7 Oct 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா