Begin typing your search above and press return to search.
கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு: போலீசார் அதிரடி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் கொட்டி அழித்தனர்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிகை பாடி கிராமத்தில் சாராயம் காய்ச்ச ஊரல் போடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், கச்சராபாளையம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா தலைமையில் தனிப்படையினர் மல்லியப்பாடி கிராமத்தில் உள்ள கோமகாடு ஓடையில் சுப்பிரமணியின் மகன் ராஜேஷ் என்பவர் 200 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் 1200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.