/* */

அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம்

திமுக வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட அத்தாணி பேரூராட்சி 3வது வார்டில் இன்று ஓட்டுப்பதிவு தொடங்கியது.

HIGHLIGHTS

அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம்
X

எல்.செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து பிரசாரம் தீவிரமாக நடந்து வந்தது. அந்த நேரத்தில், ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஐயப்பன் (53) திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.இதையடுத்து அந்த 3-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 3-வது வார்டுடில் ஜூலை 9-ம் தேதி (இன்று) தற்செயல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திமுக சார்பில், சாந்திமணி, அதிமுக சார்பில் செல்லவேல், நாம் தமிழர் கட்சி சார்பில், மோதிலால் பிரசாத் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தனர்‌. திமுக சார்பில், மரணம் அடைந்த ஐயப்பனின் மனைவி சாந்திமணி நிறுத்தப்பட்டார்.


கடந்த ஒரு வாரமாக திமுக வேட்பாளரை ஆதரித்து அந்தியூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அதிமுக வேட்பாளரை ஆதரித்து மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று முன்தினம் மாலை பிரசாரம் ஓய்ந்தது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி தேர்தல் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.


தேர்லையொட்டி எல்.செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.மேலும், இந்த 3-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாபாளையம் பகுதியில் 193 ஆண் வாக்காளர்கள் , 186 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 379 வாக்காளர்கள் உள்ளனர்.

Updated On: 9 July 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு