Begin typing your search above and press return to search.
அந்தியூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சதீஸ்குமார் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது உறுதியானது.
இதனையடுத்து, எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.