Begin typing your search above and press return to search.
ஈரோடு-கரூர் சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து
ஈரோடு-கரூர் சாலையில் லுங்கி ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருக்கு சொந்தமான லுங்கி, வேட்டிகள் சாயம் ஏற்றும் ஆலையில் இருந்து, சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள உலர வைக்கும் இடத்திற்கு ஈச்சர் வாகனத்தில் லுங்கியை ஏற்றி கொண்டு சென்றனர். வாகனம் ஈரோடு-கரூர் சாலையில் உள்ள போக்குவரத்துநகர் அருகே செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த கஜேந்திரன் மற்றும் உடன் வந்த ஸ்டாலின், திவாகர் ஆகிய மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனால் ஈரோடு- கரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.