/* */

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒதுக்கீடு விவரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சி, பவானி மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சி ஒதுக்கீடு விவரம்
X

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தலைவர் பதவிக்கு ஆண், பெண், பொது மற்றும் ஜாதிய சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாநகராட்சி பொது - பெண் பிரினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், சத்தியமங்கலம் மற்றும் பவானி நகராட்சிகள் பொது - பெண் பிரிவு, புஞ்சை புளியம்பட்டி நகராட்சி எஸ்.சி - பொது என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோபி நகராட்சி இதுவரை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொதுவாக மாற்றப்பட்டுள்ளது. ஆண், பெண் என யாரும் போட்டியிடலாம்.

மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சியில், கிளாம்பாடி பேரூராட்சி எஸ்.சி பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாசூர், கூகலூர், அவல்பூந்துறை, வெங்கம்பூர், கொடுமுடி, காஞ்சிகோவில், காசிபாளையம் - கோபி, எலத்தூர், சிவகிரி, நசியனூர், அரியப்பம்பாளையம், பெத்தாம்பாளையம், சென்னிமலை, மொடக்குறிச்சி, நல்லாம்பட்டி, வடுகப்பட்டி, சித்தோடு, பள்ளபாளையம், அத்தாணி, லக்கம்பட்டி, ஆப்பக்கூடல் என, 21 பேரூராட்சிகள் பொது - பெண் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 18 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!