/* */

அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

வெள்ளித்திருப்பூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
X

மணல் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் அடுத்த கோவிலூர் நல்லம்மாள் தோட்டம் அருகே உள்ள பள்ளத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மணல் கடத்துவதாக தனிப்பிரிவு போலீசார் தேவராஜன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் திருட்டுத்தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட, ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளியூரை சேர்ந்த சின்ராஜ் 45, மற்றும் ஆப்பக்கூடல் அருகே உள்ள மல்லியூரை சேர்ந்த சின்னச்சாமி 36 ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 29 July 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  5. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  6. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  7. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  8. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...