/* */

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
X

இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த மதன்குமார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மதன்குமார். இவர் குஜராத்தில் உள்ள பைப் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மதன்குமார் சத்தியமங்கலத்தில் உள்ள விவசாயி ஒருவரை சந்தித்து பைப் ஆர்டர் பெறுவதற்கு சென்றுள்ளார். அப்போது, பங்காளப்புதூர் ஜே.கே.கே.முனிராஜா பொறியியல் கல்லூரி பிரிவு அருகே சென்ற போது, எதிரே காளியூரை சேர்ந்தவரது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் படுகாயமடைந்த மதன்குமார் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மதன்குமாருக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில், ரஞ்சினி என்ற மனைவியும், 2 மாத குழந்தையும் உள்ளனர்.

Updated On: 9 March 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  3. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  4. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  5. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  6. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  7. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  8. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  9. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  10. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்