/* */

வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கூலி தொழிலாளி பிணமாக மீட்பு

அந்தியூர் அருகே வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கூலி தொழிலாளி இன்று காலை தவிட்டுப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் பிணமாக மீட்கப்பட்டார்

HIGHLIGHTS

வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கூலி தொழிலாளி பிணமாக மீட்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 43). மது பழக்கத்திற்கு அடிமையானதால், கடந்த மூன்று வருடங்களாக வலிப்பு நோய் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வேலைக்கு சென்று வருவதாக, கூறிவிட்டு சென்ற காமராஜ், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து காமராஜ் வீட்டிற்கு வராததால், அவரது மகன் ஜீவானந்தம், பல இடங்களில் தேடியும் எந்த பலனும் இல்லை.

இதனையடுத்து, இன்று காலை அந்தியூர் தவிட்டுப்பாளையம் பழைய பெட்ரோல் பங்க் அருகில் காமராஜ் மயங்கிய நிலையில் கிடப்பதாக, ஜீவானந்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற ஜீவானந்தம் மற்றும் உறவினர்கள் காமராஜை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காமராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஜீவானந்தம் அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...