/* */

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பவானி வட்டாட்சியரிடம் மனு

சிபிஐ கட்சியின் சார்பில், ஒரிச்சேரிப்புதூரில் 22 வருடங்களாக வசித்து வரும் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

HIGHLIGHTS

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பவானி வட்டாட்சியரிடம் மனு
X

பவானி வட்டாட்சியரிடம் சிபிஐ கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஒரிச்சேரிபுதூரில் 16-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 22 வருடங்களாக அரசு நிலத்தில் வசித்து வருகின்றனர். இதையடுத்து முறையாக வீட்டு ரசீது,மின் ரசீது இருந்தும் வீட்டு மனை பட்டா வழங்க கோரி பலமுறை மாவட்டம் நிர்வாகத்திடம் மனு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அருள் தலைமையில் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் சென்று பவானி வட்டாச்சியர் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு வழங்கினர். தொடர்ந்து பட்டா இல்லாததால் குடும்பத்தினர் தொகுப்பு வீடு வங்கியில் கடன் வசதி உள்ளிட்டவை கிடைப்பதில்லை என்பதால் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட வட்டாச்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Updated On: 7 Jun 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்