/* */

செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயம்

பெருந்துறையில் செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயம்
X

பைல் படம்.

பெருந்துறை திலகர் தெருவை சேர்ந்தவர் பூங்கொடி. சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், தாரணி என்கிற பூஜா (வயது 15) என்ற மகளும் உள்ளனர். தாரணி பெருந்துறை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தாரணி வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் செல்போனில் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பூங்கொடி மகள் தாரணியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பூங்கொடி வேலைக்கு சென்று விட்டார். 10 மணிக்கு தாரணி தனது தாய் பூங்கொடிக்கு போன் செய்து தான் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் தாரணி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பூங்கொடி மகளை மீட்டுத்தருமாறு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!