/* */

45 நாளில் கொரோனா மருத்துவமனை : ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் தந்து கௌரவம்

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு, ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாதனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்களிப்புடன், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 14.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கொரோனா மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து நவீன தொழில்நுட்பத்துடன் கடந்த மே 18ஆம் தேதி மருத்துவக்கல்லூரி வளாகத்திலேயே 69 ஆயிரம் 200 சதுரடியில் மூன்று தளங்களுடன் 401 படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டுமான பணி தொடங்கியது.

போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று 45 நாட்களில் பிரம்மாண்டமாக கொரோனா மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. இந்த பணிகளில் ஈடுபட்டவர்களை பாராட்டி கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழஙகும் நிகழச்சி, பெருந்துறையில் இன்று பெற்றது.

இந்நிகழ்ச்சின் மூலம் குறுகிய காலத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக படுக்கை வசதிகளுடன் கொண்ட மருத்துவமனை உருவாக்கியதற்காக, உலக அளவிலான எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

மேலும் ஆசிய அளவில் ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்திய அளவில் இந்தியன் ரெக்கார்டு அகடமி மற்றும் தமிழக அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் சாதனைக்கான சான்றிதழை வழங்கினர். இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சகாதேவன் கூறுகையில், தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரும் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர். அத்தகைய சூழலில் இந்த மருத்துவமனையில் மக்களுக்கு பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்று பரவல் என்பது முழுவதும் அளிந்தவுடன் இம்மருத்துவமனையை ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அனைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றப்படும் என தெரிவித்தார்.

Updated On: 7 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!