கூண்டில் சிக்கிய சிறுத்தை; கோபி அருகே டி.என்.பாளையம் மக்கள் நிம்மதி
Erode news, Erode news today - ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் கால்நடைகளை கொன்ற சிறுத்தை சிக்கியதால், மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் கால்நடைகளை கொன்ற சிறுத்தை சிக்கியதால், மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ஆடு, மாடு என கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட கன்று குட்டியை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கடித்துக் கொன்றது.
அதற்கு முன்பாக அதே பகுதியில் நஞ்சப்பன் என்கிற முருகேசன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்றது. இதைத் தொடர்ந்து டி என் பாளையம் வனத்துறையினர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர், அந்த சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை சிறுத்தை, வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது, அதைத்தொடர்ந்து சிறுத்தையை பவானிசாகர் அடுத்த தொங்குமரஹாடா மூலப்பட்டி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. கூண்டில் சிக்கியது, நான்கு வயதான பெண் சிறுத்தை என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.