/* */

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும்.

HIGHLIGHTS

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட   ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
X

பவானி நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்த சங்க நிர்வாகிகள்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இ.கம்யூ. கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், சங்கத் தலைவர் பாலமுருகன், ஒன்றியச் செயலாளர் கோபால், மாவட்ட சுமைப்பணி தொழில்சங்க ஒருங்கிணைப்பார் சந்திரசேகர், சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பவானி நகராட்சி ஆணையாளர் தாமரையிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம் : தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.15,000 ஊக்கத் தொகையை பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினக்கூலியை ரூ.578-ஆக உயர்த்திட வேண்டும். 480 நாள்கள் பணி முடித்த ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.பவானி நகராட்சி கிளையின் துணைத் தலைவர் செல்லப்பன், செயலாளர் சீனிவாசன், நிர்வாகக் குழு உறுப்பினர் குப்புராஜ், பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

Updated On: 6 Jan 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  3. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  4. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  5. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  6. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  7. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  8. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  9. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்