/* */

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மேம்படுத்துவார் மோடி: ஏ.சி.சண்முகம்

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 3வது முறை பிரதமராக பதவியேற்கும் போது, ​​இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை பிரதமர் மோடி தரம் உயர்த்துவார் என புதிய நீதிக்கட்சி மாநிலத் தலைவர் ஏ.சி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

HIGHLIGHTS

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மேம்படுத்துவார் மோடி: ஏ.சி.சண்முகம்
X

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதிய நீதிக்கட்சியின் மாநில தலைவர் ஏ.சி.சண்முகம்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 3வது முறை பிரதமராக பதவியேற்கும் போது, ​​இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை பிரதமர் மோடி தரம் உயர்த்துவார் என புதிய நீதிக்கட்சி மாநிலத் தலைவர் ஏ.சி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரோட்டில் புதிய நீதிக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ்.கிருபா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு தொண்டர்களிடையே பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தனது பதவிக் காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் 13வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்குத் இந்தியாவை தரம் உயர்த்தினார். அவர் தனது 3வது பதவிக் காலத்தில் பிரதமர் மானியத்தை இரட்டிப்பாக்கி ரூ.12,000 ஆக உயர்த்துவார்.


தமிழகத்திற்கு வந்த அவர், பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை கொண்டு வந்தார். மத்திய அரசு மற்றும் அண்டை மாநிலங்களுடன் திமுக சுமூகமான உறவைப் பேணியிருந்தால், தமிழகம் பல திட்டங்களைப் பெற்றிருக்கும், மேகதாது, பாலாறு அணைத் திட்டங்களைச் தடுத்திருக்கும். தற்போது கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையால் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. திமுகவின் சாதிக் பாட்சாவே இந்தப் பிரச்னையில் ஈடுபட்டார். ஏற்கனவே டாஸ்மாக் மக்களை கெடுத்து விட்டது.

தேர்தல் ஆணையர் ராஜினாமா தொடர்பாக மோடி மீது சேறு பூசும் நடவடிக்கையில் விசிக ஈடுபட்டுள்ளது. உக்ரைன் மற்றும் காசா போர்களை தீர்த்து வைக்குமாறு அமெரிக்காவும் பல நாடுகளும் கேட்கும் அளவிற்கு மோடி உலகத் தலைவராக மாறி உள்ளார். இங்கு திமுகவும், அதிமுகவும் அவர்கள் ஆட்சியின் தவறுகள் காரணமாக மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. இப்போது, ​​மாநிலத்தின் வளர்ச்சியை பல மடங்கு உறுதி செய்யக்கூடிய அளவிற்கு பாஜக அவர்களுக்கு மாற்றாய் மாநிலத்தில் வளர்ந்துள்ளது. எனவே பாஜக கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்லும். இவர் அவர் கூறினார்.

Updated On: 11 March 2024 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி