/* */

சோலார் பகுதியில் 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல்

ஈரோடு சோலார் பகுதியில் 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

சோலார் பகுதியில் 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல்
X

பைல் படம்.

மழை காலம் தொடங்கி உள்ளதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் வீடு, வீடாக சென்று பணியாளர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு உற்பத்தியாகாத வண்ணம் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வீட்டை தூய்மையாக வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் மொடக்குறிச்சி தாலுகா லக்காபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட சோலார் அடுத்த செண்பகமலை நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் ஒரே தெருவில் வசிக்கும் 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து லக்காபுரம் பஞ்சாயத்து சார்பில் பணியாளர்கள் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு வீடு, வீடாக சென்று மருந்து தெளித்து வருகின்றனர். மேலும் வேறு யாருக்கும் காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 28 Oct 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!