Begin typing your search above and press return to search.
சத்தியமங்கலம் அருகே பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு
கடம்பூர் பவளகுட்டை மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் பவளகுட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது 70). இவர் கடந்த 28-ம் தேதி மதியம் 1 மணி அளவில் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஊர்ந்து வந்த கட்டுவிரியன் பாம்பை வெள்ளையம்மாள் கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் பாம்பு அவரை கடித்தது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாள் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.