/* */

சத்தியமங்கலம் அருகே பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு

கடம்பூர் பவளகுட்டை மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு
X

வெள்ளையம்மாள்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் பவளகுட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது 70). இவர் கடந்த 28-ம் தேதி மதியம் 1 மணி அளவில் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஊர்ந்து வந்த கட்டுவிரியன் பாம்பை வெள்ளையம்மாள் கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் பாம்பு அவரை கடித்தது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாள் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 1 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  4. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  5. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?