/* */

ஈரோடு அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி பலி

ஈரோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஈரோடு அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி பலி
X

பைல் படம்.

ஈரோடு லக்காபுரம் முத்துகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 52). விவசாயி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவர் மருந்து மற்றும் மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் தர்மலிங்கம் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார். அவர் வெள்ளபாளையம்- கருக்கம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் மயங்கி கிடந்த தர்மலிங்கத்தை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 3 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு
  10. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்