/* */

கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்

கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஈரோட்டில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், பேரணியை துவக்கி வைத்த  கலெக்டர்
X

கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட கலெக்டர். 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்திற்கு நாள்தோறும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ப்ளையர்கள், துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள் வெளியீடு மற்றும் விநியோகம், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு பதிவு செய்தல் , ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் பேச்சு போட்டி ,நேரடி ஒளிபரப்பு நிகழ்வுகள் நடத்துதல், பேருந்து நிலையம், இரயில்வே நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இன்று சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தன்சுத்தம் மற்றும் கொரோனா தடுப்பூசி போன்ற விழிப்புணர்வு குறித்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகத்தினை அரங்கேற்றினர். அதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்த கானாபாடல் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில், கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம், தன் சுத்தம், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.பி.முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  2. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  3. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  4. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  5. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  6. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  7. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  8. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  9. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!