/* */

ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ரயில் டிரைவர்கள் உண்ணாவிரதம்

ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் டிரைவர்கள் உண்ணாவிரதம்.

HIGHLIGHTS

ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ரயில் டிரைவர்கள் உண்ணாவிரதம்
X

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ரயில் டிரைவர்கள்.

ஈரோடு ரயில் நிலையம் அருகே இன்று அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ரயில் டிரைவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சேலம் கோட்ட தலைவர் சந்திர மனோகர் தலைமை வகித்தார். ஈரோடு கிளை செயலாளர் அருண் குமார் வரவேற்றார். தென் மண்டல துணை தலைவர் முருகேசன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும். இரவு பணிக்கான படியை நிறுத்த கூடாது. வேலை செய்யும் தூரத்தை அதிகப்படுத்தி வேலை நேரத்தை அதிகப்படுத்தக் கூடாது. வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனாவால் இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரைவர்கள் பங்கேற்றனர்.

Updated On: 21 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!