/* */

ஈரோடு:கொரோனா தடுப்பூசி தீர்ந்ததால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை எனக்கூறியதால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு:கொரோனா தடுப்பூசி தீர்ந்ததால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!
X

கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறியதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஈரோடு மாநராட்சிக்குட்பட்ட மரப்பாலம் அருகேயுள்ள சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளியில் கொரோனா தடுபபூசி கிடைக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போதிய இருப்பு வைக்காமலும் முறையான தகல்களை தறாமல் அலைய விடுவதாகவும் குற்றம்சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், கூடிய விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 3 Jun 2021 11:11 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!