/* */

ஈரோடு மாவட்டத்தில் 928.60 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக கோபியில் 97.00 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 928.60 மி.மீ மழை பதிவு
X
ஈரோட்டில் மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இடி - மின்னலுடன் கனமழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரத்தில் லேசான மழை பொழிவு இருந்து வந்தது. இதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈரோடு மாநகரில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. மாலை 7 மணிக்கு பிறகு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் இரவு 8 மணி முதல் தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.இந்த மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் கழிவுநீர் ஓடைகளில் நிரம்பி சாலைகளில் பெருக் கெடுத்து ஓடியது.இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதேபோல். மாவட்டத்தில் அந்தியூர் , கொடுமுடி சத்தி, நம்பியூர் , தாளவாடி, கவுந்தப்பாடி, சென்னிமலை, எலந்தகுட்டைமேடு, அம்மாபேட்டை கொடிவேரி, குண்டேரிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதில், அதிகபட்சமாக கோபியில் 97 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஈரோடு - 25.00 ,

பெருந்துறை- 38.00 ,

கோபி- 97.00 ,

தாளவாடி - 16.00 ,

சத்தி - 55.00 ,

பவானிசாகர்- 37.20 ,

பவானி - 21.00 ,

கொடுமுடி - 80.00 ,

நம்பியூர் - 62.00 ,

சென்னிமலை - 50.00 ,

மொடக்குறிச்சி- 75.00 ,

கவுந்தப்பாடி- 40.00 ,

எலந்தகுட்டைமேடு - 78.4 ,

அம்மாபேட்டை- 55.00 ,

கொடிவேரி - 49.20 ,

குண்டேரிப்பள்ளம்- 58.40 ,

வரட்டுப்பள்ளம்- 91.40 என மாவட்டத்தில் 928.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 Oct 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...