/* */

சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

சித்தோட்டில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
X

சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பார்வையாளர்கள் ராஜீவ் ரஞ்சன் மீனா, ராம் கிருஷ்ண ஸ்வரன்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

சித்தோட்டில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில், ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ராஜீவ் ரஞ்சன் மீனா (பொது), ராம் கிருஷ்ண ஸ்வரன்கர் (காவல்) ஆகியோர் வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் தேர்தல் 2024-க்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் முதல்கட்டமாக நாளை மறுநாள் (19ம் தேதி) தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ராஜீவ் ரஞ்சன் மீனா (பொது) மற்றும் ராம் கிருஷ்ண ஸ்வரன்கர் (காவல்) ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் இடங்கள், வாக்கு பெட்டிகள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, வாகனம் நிறுத்துமிடம், தபால் வாக்குகள் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 17 April 2024 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  3. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  7. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  10. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...