/* */

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை இரவோடு இரவாக அகற்றிய மர்ம நபர்கள்

ஈரோட்டில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை இரவோடு இரவாக மர்ம நபர்கள் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை இரவோடு இரவாக அகற்றிய மர்ம நபர்கள்
X

சேதமடைந்த கோவில்.

ஈரோடு கொல்லம்பாளையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இயந்திரத்தை பயன்படுத்தி கோவிலை முழுமையாக அகற்ற முயசித்துள்ளனர். பொதுமக்கள் நோட்டம் விடுவதை அறிந்த மர்ம நபர்கள் முயற்சியை பாதியில் விட்டு சென்று விட்டனர்.

அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கோவில் இருந்த இடம் குமாரசாமி என்பவருக்கு சொந்தமானது என்றும் ஓராண்டுக்கு முன்பே கோவில் நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்ததாகவும், நேற்று நள்ளிரவில் போர்வெல் இயந்திரத்தின் சட்டத்தைப் பயன்படுத்தி கோவிலை அகற்றி புறம்போக்கு நிலத்தில் வைத்து விட்டு பழமை வாய்ந்த வேப்பமரத்தை அகற்றியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குமாரசாமி மற்றும் அந்த நிலத்துக்கு சொந்தமான மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Updated On: 11 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  4. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  9. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  10. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?