/* */

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை

பவானி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு.

HIGHLIGHTS

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை
X

பைல் படம்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. அப்போது இந்த மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி என 23 இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பெண்களை வைத்து லாட்டரி சீட்டுகளை எழுதி வாட்ஸ்அப் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், தினக்கூலி தொழிலாளர்கள், லாட்டரி சீட்டு பணத்தை செலுத்தி தங்களது வருமானத்தில் இருந்து வருகின்றனர். பல பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு சட்டவிரோதமாக நடைபெறும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 6 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்