/* */

அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்: கலெக்டர்

அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததார்.

HIGHLIGHTS

அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்: கலெக்டர்
X

பைல் படம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

பொது வினியோக திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் வருகிற நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வருகிற 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 1,134 ரேஷன் கடைகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெற வருகிற 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த வினியோகம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விரும்புபவர்களுக்கு வழங்கப்படும். அனைவருக்கும் இதனை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள் வழக்கம்போல் பண்டிகை காலம் முடிந்து வருகிற 8-ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

விற்பனையாளர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்கள் வழங்கும் முன்பு கிருமி நாசினி கொண்டு கைரேகை பதிவு செய்யும் எந்திரத்தை சுத்தப்படுத்த வேண்டும். மேலும் பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது விரல்களை ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டு இருக்கும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தினால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Updated On: 27 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...