/* */

ஈரோடு மாவட்டத்தில் 800 மையங்களில் நடந்த முகாம்களில் 50,000 பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 10-வது கட்டமாக 800 மையங்களில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 800 மையங்களில் நடந்த முகாம்களில் 50,000 பேருக்கு தடுப்பூசி
X

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன், இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 800 மையங்களில், சனி (20.11.2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) இரண்டு நாட்கள் 10-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 50 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 21 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்