Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அதன்பிறகு நேற்று யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 770 ஆக உயர்ந்தது. அதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.