/* */

விளாங்கோம்பை மலைக்கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள விளாங்கோம்பை மலைக்கிராமத்தில் பொதுமக்களிடம் குறை கேட்டு, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

விளாங்கோம்பை மலைக்கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஆட்சியர் உத்தரவு
X

விளாங்கோம்பை மலைவாழ் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்த கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி விளாங்கோம்பை பழங்குடியினர் வாழும் மலைவாழ் கிராமத்தினை பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது கலெக்டர் தெரிவித்ததாவது, விளாங்கோம்பை மலைக்கிராம பகுதியில் சுமார் 47 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பட்டா பெற்ற 36 குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள 31 மாணவ, மாணவியர்களில் 21 மாணவ, மாணவியர்கள் வினோபா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் மற்றும் 10 மாணவ, மாணவியர்கள் கொங்கர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்று வருகின்றனர். மேலும், இம்மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கு எளிதில் சென்று வர ஏதுவாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இங்குள்ள பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பில் கல்கரை அமைத்தல் மற்றும் குட்டை சீரமைத்தல் பணிகளோடு வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்த்துறையின் சார்பில் மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நடமாடும் வாகனம் மூலமாக நியாயவிலைப் பொருட்கள் அப்பகுதி மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


மேலும், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம், பள்ளிக்கூட கட்டிடங்கள் அமைத்தல், வேளாண் பயன்பாட்டிற்கான ஆழ்துளை கிணறு மற்றும் அகழிக்குழிகள் கூடுதலாக அமைத்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் வழங்கப்படும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை விரைந்து வழங்கிடவும் மற்றும் ஆதார் சேவையை அளித்திடவும் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.


தொடர்ந்து, கொங்கர்பாளையம் ஊராட்சி விளாங்கோம்பை பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், கொங்கர்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் பாரத பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், கொங்கர்பாளையம் பகுதியைச் சார்ந்த விவசாயி திரு.சக்திவேல் முத்துசாமி அவர்கள் சுமார் 1.44 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,88,023/- அரசு மானியத்துடன் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயிரிடும் முறைகள் குறித்தும் மற்றும் தேவைகள் குறித்தும் விவசாயிடம் கேட்டறிந்தார்.


இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன், தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாமணி, சாந்தி, கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் ருத்திரசாமி, வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 13 Jun 2023 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  2. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  5. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  7. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  8. ஈரோடு
    மொடக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு
  9. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?