/* */

அந்தியூர் விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய்பருப்பு ரூ.1.60 லட்சத்துக்கு ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.60 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூர் விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய்பருப்பு ரூ.1.60 லட்சத்துக்கு ஏலம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் இன்று நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மூவாயிரம் தேங்காய்கள் கொண்டு வந்தனர். தேங்காய்கள் குறைந்தபட்சம் 5 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்சம் 14 ரூபாய் 59 காசுக்கும், சராசரியாக 9 ரூபாய் 79 காசுக்கும், 29.98 குவிண்டால் எடை கொண்ட தேங்காய்கள் மொத்தம் 30 ஆயிரத்து 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும், 28 மூட்டை தேங்காய் பருப்பு குறைந்தபட்சம் 85 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்சம் 94 ரூபாய் 85 காசுக்கும், சராசரியாக 92 ரூபாய் 85 காசுக்கும், 16.96 குவிண்டால் எடை கொண்ட தேங்காய் பருப்பு மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று நடைபெற்ற ஏலத்தில், மொத்தம் 46.94 குவிண்டால் விவசாய விளைபொருட்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரத்து 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், 49 விவசாயிகள் பயன்பெற்றதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்

Updated On: 18 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை