/* */

சாலையை கடக்கும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்

பவானிசாகர் அணை பூங்கா அருகே பகல் நேரத்தில் சாலையைக் கடக்கும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை வெயில் அதிகளவில் காணப்படுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் பவானி ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு பவானிசாகர் அணை பூங்காவின் அருகே உள்ள பாலத்தை கடந்து சென்றது.

இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகினர். தற்போது கோடைகாலம் என்பதால் வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி சாலையோரம் நடமாடும் எனவும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையோடு பயணிக்க வேண்டும் எனவும் பவானிசாகர் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 April 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  2. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  4. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  5. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  6. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  7. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  8. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  9. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  10. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...