/* */

ஆடி பிறப்பு : பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடத்தடை

கொரோனா காரணமாக, ஆடி பிறப்பு நாளான இன்று, பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆடி பிறப்பு : பவானி  கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடத்தடை
X

தமிழகத்தில் சிறந்த பரிகாரத் தலங்களில் பவானி கூடுதுறையும் ஒன்று. பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான பவானியை, 'திரிவேணி சங்கமம்' என்று அழைக்கப்படுகிறது. பவானி கூடுதுறையில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஆடி 1ஆம் தேதி, காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி செல்வார்கள். மேலும் புதுமணத் தம்பதியர் அருகம்புல் வைத்து நீராடுவதோடு, தங்களின் திருமண மாலைகளை பூஜித்து காவிரியில் விட்டுச் செல்வார்கள். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்வார்கள். குறிப்பாக ஆடி மாதத்தில் பவானி சங்கமேஸ்வர் கோவிலில் வழக்கத்தை விட அதிக மக்கள் கூடுவார்கள்.

தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. இதன் காரணமாக ஆடி பிறப்பான இன்று, பவானி கூடுதுறையில், காவிரியில் புனித நீராடுதல் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்து, கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Updated On: 17 July 2021 3:22 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...