/* */

பவானி-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 65,200 கனஅடி தண்ணீர் திறப்பாீல் பவானி-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானி-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
X

பவானி காவிரி ஆற்றில் இருபுறமும் கரைகளை தொட்டபடி கரைபுரண்டு ஓடும் தண்ணீர்.

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதையடுத்து அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 65 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்தது. அணை முழுவதுமாக நிரம்பியுள்ளதால் 65 ஆயிரத்து 200 கனஅடியும் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் செந்நிறத்தில் வெள்ளமெனப் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் நேற்று மாலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி காவிரி ஆற்றை வந்தடைந்தது. இருபுறமும் கரைகளை தொட்டபடி கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் கரையோரத்தில் தாழ்வான இடமான சோமசுந்தரம், சீனிவாசபுரம், பழைய பஸ் நிலையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் பவானி நகராட்சி ஆணையாளர் லீமா சைமன் ஆகியோர் ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேடான பகுதிகளுக்கு வந்து தங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 20 Nov 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...