Begin typing your search above and press return to search.
பவானி: கார் மோதி சமையல் தொழிலாளி பலி
பவானி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
HIGHLIGHTS
பவானி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). சமையல் தொழிலாளி. நேற்று முன்தினம் சித்தோட்டை அடுத்த கங்காபுரம் டெக்ஸ்வேலி அருகே உள்ள பகுதிக்கு வேலைக்கு சென்று உள்ளார். இதற்காக அவர் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது.
இதனையடுத்து, சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவரின் மகன் சதாம் உசேன் என்பவரை கைது செய்தனர்.