Begin typing your search above and press return to search.
அந்தியூரில் ரூ.4.06 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
அந்தியூர் நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.06 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் விற்பனை நடைபெற்றது.
HIGHLIGHTS
அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சென்னம்பட்டி, ஜரத்தல், எண்ணமங்கலம், ஆப்பக்கூடல், அத்தாணி பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3 ஆயிரத்து 160 வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.
இதில், கதலி ஒரு கிலோ ரூ.15-க்கும், நேந்திரம் கிலோ ரூ.28-க்கும், பூவன் ஒரு தார் ரூ.350-க்கும், செவ்வாழை ரூ.470-க்கும், தேன்வாழை ரூ.450-க்கும், மொந்தன் ரூ.410-க்கும், ராஸ்தாளி ரூ.320-க்கும், பச்சை நாடன் ரூ.380-க்கும், ரொப்பர் ரூ.270-க்கும் ஏலம் போயின. மொத்தம் ரூ.40 லட்சத்து 6 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனையானது. அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் போட்டிப்போட்டு வாழைத்தார்களை ஏலம் எடுத்துச் சென்றனர்.