/* */

அந்தியூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ. துவக்கி வைப்பு

அந்தியூரில், 5 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை, எம்எல்ஏ வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அந்தியூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ. துவக்கி வைப்பு
X

மாக்கல்புதூரில் , கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை எம்.எல்.ஏ வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சி, மாக்கல்புதூர் கிராமத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம், இன்று கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாசலம் கலந்து கொண்டு , பிரம்மதேசம் கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட, மொத்தம் 5 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்தார்.


மழைக்காலங்களில், கால்நடைகளுக்கு அதிகமாக கோமாரி நோய் பரவுவதால், நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளதாக, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். உதவி இயக்குநர் எஸ். விஷ்ணுகந்தன், மருத்துவர் எஸ். அர்ஜுணன், கால்நடை ஆய்வாளர் சர்மிளா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி